ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் 'நீ என்ன தேடுகிறாய்?' என்று கேட்டான்.
'என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது' என்றான் குடிகாரன். வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
'உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா?'
'ஆமாம்'
'எங்கே தொலைத்தாய்?'
'அடுத்த தெருவில் தொலைத்தேன்.'
'அதை இங்கே ஏன் தேடுகிறாய்?'
'அந்த தெருவில் லைட் இல்லை; வெளிச்சமும் இல்லை' என்றான் குடிகாரன்.
No comments:
Post a Comment